பூப்படைந்த குமரிகளை
குருத்துவேலிக்
கூட்டிலிட்டு
குழைத்து மஞ்சளிட்டு
கூ.. வென்று கிழவியெல்லாம்
கூடிக் கும்மிகட்டி
காத்துக் கிடந்து
காவலிட்டுக் குலவைகத்திக்
குடங்குடமாய்த்
திரவியங்கள்
கொட்டிக்
குளிக்க வார்த்து
சீவி அலங்கரித்து
செதில் செதிலாப்
பதக்கமிட்டு
போற்றிப் பெருமையெல்லாம்
பிதற்றிப் பெருமெடுப்பில்
சாற்றிக் கொண்டாடும்
சடங்குகள் தாம்
கொஞ்சமென்றோ.
அக்காளுடன்
ஆரும் ஒருவன் எங்கோ
தெருவிலொரு பொதுவிடத்தில்
ஏதும் கதைச்சிட்டால்
எரிந்து விழும்
ஆடவர் நாம்.
மீறி ஒரு பெடியன்
மங்கை மனம் மாற்றிவிட்டால்
மண்டைச் சுவர் மோதி
மரித்திடத் தான் மாட்டோமோ?
ஊரோடு சேர்த்து
ஊழிசெய்த
உலகமகா சாத்வீகமும்
பெளத்தச் சீனர்களும்
மறையோதும் இஸ்லாமியரும்
சமாதானமோதிய
சாத்தான் மேற்குலகும்,
கெஞ்சக் கெஞ்ச
கேட்காது
நஞ்சுக் குண்டு
நாலு போட்டு
நாசமாக்கிய வஞ்சக
பாரதரும்!
எல்லாம்
முடிந்தும்,
ஏதெல்லாம் நடக்காதோ
அஃதெல்லாம்
நடந்தேற;
நாய்களெல்லாங் கூடி
புலிப்பிணத்தைக்
குதறித் தின்றும்;
அடங்காக் குரோதமும்
அச்சமில்லா இறுமாப்பும்
கொச்சைச் சிங்களநாய்
குதறித்தின்னக்
குழுக் குழுவாய்
சின்னக்
குழந்தைப் பெண்கள்!
எங்கள்
குலைகளெல்லாம்
கொப்போடு
பாறிவிழ;
நஞ்சும்
வஞ்சகமும்
நெஞ்சுவெடி
கொண்டதும் போ;
`எஞ்சும்
சிலநூறும்
மிஞ்சுமோ`
அஞ்சுகிறோம்!
சட்டங்களும்
சேர்ந்து
கட்டிவைத்த
கோட்டைக்குள்ளே
`வாடி`யென்று
அழைக்கிறான்
கேட்டெதிர்க்க
ஆருமில்லை.
ஒற்றை வீட்டிலொரு
இருண்ட குழியில்
பத்துப் பருவப் பெண்கள்
பத்தும்
சிறுதுணியுமற்று!
25.06.2010
No comments:
Post a Comment